தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இவர் மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்டிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில் அதற்காக தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று இருந்தார்.

அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, நண்பர் பாலையாவால் பார்வையாலே ஒருவரை கொல்ல முடியும். அவர் கண்ணடித்தால் ஜிப் பற்றி எறிந்தே முப்பது அடிக்கு மேலே பறக்கும். இதனை ரஜினி, அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். பாலைய்யா செய்தால் ஏற்பார்கள். அவரை ரசிகர்கள் என்டிஆராகவே பார்க்கின்றனர் என்று ரஜினி பேசியுள்ளார்.