நடிகர் ரிஷப் ஷெட்டி டைரக்டு செய்து நடித்த காந்தாரா படம் சென்ற செப்டம்பர் 30ம் தேதியன்று ரிலீஸ் ஆகியது. கடந்த ஆண்டு வந்த திரைப்படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் உறையவைத்த கன்னட படம் “காந்தாரா”.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் வசூலை குவித்தது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடியின மக்களின் சமய வழிபாட்டை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்த படத்தை பலரும் பாராட்டினர்.

அதன்பின் இப்படத்தின் 2-வது பாகம் அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் டைரக்டர் ரிஷப் நிஜ காந்தாராவான பஞ்சுருளி தெய்வத்தை நேரில் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.