உத்தரபிரதேசம் மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் இருக்கிறது. தலோல் உலோம் டியொபெண்ட் எனும் இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ் செய்ததாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

அதுமட்டுமின்றி மாணவர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாடியை வெட்டுவது இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.