திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை நாளை முதல் தொடங்கும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

மார்ச் 1 முதல் 31 வரையிலான முன்பதிவுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் நாளை மாலை 4 மணி முதல் பெறலாம். திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் நாளை முதல் பெறலாம்.