உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். 48 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் பலாத்கார புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இது போன்று கேள்விப்பட்டதே இல்லை என உத்தரபிரதேச காவல்துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் 2வது புகார் அளித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுவிட்டார். முதலில் புகாரளித்த பெண்ணின் கணவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. இதனிடையே காவல்துறையினர் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதனடிப்படையில் கிடைக்கக்கூடிய 2வது புகாரளித்த பெண்ணின் மருத்துவ அறிக்கை முடிவின் படி முதல் புகாரளித்த பெண்ணின் கணவரின் கைது நடவடிக்கை எடுக்கப்படும். முதலாவதாக புகாரளித்த பெண், வழக்கு பதிவுசெய்யாவிட்டால் தீக்குளித்து விடுவேன் என்று காவல்துறையினரை மிரட்டியுள்ளார். பழைய பகையால் இது போன்று நடந்திருக்ககூடும் என காவல்துறையினர் கூறினாலும், மருத்துவ அறிக்கை மற்றும் தொடர் விசாரணை முடிவிலேயே விவரங்கள் தெரியவரும் என சொல்லப்படுகிறது.