சிவகாசி அருகே மகன், மகள் மற்றும் பேத்தியை கொன்று விட்டு ஆசிரியர் தம்பதி தற்கொலை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே பாலாஜி நகரில் ஆசிரியர்களான லிங்கம்(45)- பழனியம்மாள்(43) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆதித்யா(13) என்ற மகனும், ஆனந்தவள்ளி(28) என்ற மகளும் இருந்துள்ளனர். ஆனந்த வள்ளிக்கு திருமணமாகி பிறந்து இரண்டு மாதமே ஆன சசிகா என்ற குழந்தை இருந்தது.

கடன் தொல்லை காரணமாக லிங்கம், பழனியம்மாள் தம்பதி தங்களது பிள்ளைகளுக்கும், பேத்திக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.