பொதுவாகவே ஓய்வூதியம் பெறும் நபர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிப்பதன் மூலம் ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் அதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் அரசு உறுதிப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மென்பொருள் பொறியாளர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க தற்போது ஓய்வூதியதாரர்களுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆவணங்களை நேரடியாக சென்று வழங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது மொபைல் செயலின் மூலமாக தங்களுடைய ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். இந்த மொபைல் செயலி வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பயோமெட்ரிக் முறை மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய விவரங்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.