ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசிய ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் திமுகவை சேர்ந்தவர்களால் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “ஆட்டுக்கு தாடியும் தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவியும் எதற்கு? #DictatorRavi, #GetoutRavi” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.