தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வெழுத வரும்போது மாணவர்கள் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அந்த மருத்துவ சான்றுகளின் மேல் ஏதேனும் சந்தேகம் இருப்பின், கூடுதல் ஆவணங்களை தேர்வு எழுதிய பிறகு சமர்பிக்க அறிவுறுத்தவேண்டும். உரிய சான்று சமர்பிக்காமல் சலுகையை மட்டும் பெற்ற தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.