சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அசோக் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சி உதவியுடன் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.