தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி இந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் மதுபான கடைகள் செயல்படவில்லை.

இந்நிலையில் காந்தி நினைவு தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 30ஆம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அன்று மது கடைகளை மூட வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா என அரசு ஆலோசித்து வருகிறது..