டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து திருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் வாயிலாக கிடைத்த வருவாய் விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின் கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்க அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.