தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் சென்ற வருடம் இவரின் நான்கு திரைப்படங்கள் வெளியாகி மூன்று திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இருப்பினும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கின்றார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் இணைந்து நடிக்கின்றார்.

இந்த நிலையில் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பேன் என இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது. என்னை போல எத்தனையோ நடிகைகள் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என காத்திருக்கின்றார்கள். எனக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அவருடன் இணைந்து நடிக்கும் அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பல நாள் கனவு தற்போது நினைவாகி இருக்கின்றது. அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.