தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் தற்போது குறும்படங்களை இயக்கி வருகிறார்.

சஞ்சய்க்கு படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்த நிலையிலும் படங்களை இயக்குவதில் தான் அவர் ஆர்வமாக இருக்கிறார். அதன் பிறகு நடிகர் விஜய் தன்னுடைய மகன் ஒரு கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டதாக தற்போது ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக நடிகர் விஜய் தன் வீட்டின் மொட்டை மாடியில் மினி கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றையும் வைத்துள்ளாராம். அதோடு சஞ்சய்க்கு பயிற்சி கொடுப்பதற்காக தனி கிரிக்கெட் பயிற்சியாளரையும் விஜய் நியமித்தாராம். ஆனால் காலப்போக்கில் யாருடைய முடிவு என்னவாக இருக்கும் என்று கூறுவது போன்று நடிகர் விஜயின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனராக வேண்டும் என விருப்பப்பட்டு குறும்படங்களை இயக்கி வருகிறார்.