தமிழக சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 2000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.