சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் விருதுநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு அருண்குமார் தமிழ்நாடு காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 7 மாதங்களாக அருண்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் புஷ்பராஜ் என்பவருடன் அயனாவரம் வசந்தா கார்டன் முதல் தெருவில் இருக்கும் வீட்டில் தங்கி வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அருண்ராஜ் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் பிரியா நெல்லை ஆயுதப்படையில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை அருண்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்து வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் அருண் குமார் தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அருண்குமாரிடம் அவரது பெற்றோரை பார்க்க கூடாது கவனிக்க கூடாது என பிரியா செல்போனில் சண்டை போட்டதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் அருண்குமார் அதிகாலை வழக்கம் போல குதிரைப்படை அலுவலகத்திற்கு சென்று காலை 10 மணிக்கு சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கி அயனாவரத்தில் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அருண்குமார் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.