திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் துப்புரவு பணியாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், சந்தோஸ் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை பெரிய முக்கனூர் சிலிப்பி வட்டம் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் மரத்தில் சீனிவாசன் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.