திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை கடற்கரையில் அரிய வகை ஆமை ஒதுங்கியதை பார்த்த மீனவர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆலிவ் ரெட்லி என்ற ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரி மணிகண்டன் மற்றும் உவரி கடலோர காவல் போலீசார் அந்த முட்டைகளை கடற்கரையில் பாதுகாப்பான இடத்தில் புதைத்து வைத்து ஆமையை கடலில் விட்டுள்ளனர்.