கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராஜாஜி நகரில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து காதல் விவகாரம் தொடர்பாக மன உளைச்சலில் இருந்த தமிழரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.