கடலூர் மாவட்டத்தில் உள்ள கோசத்திரம் நடுக்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடலூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்க வந்துள்ளார். இந்நிலையில் ராசாபேட்டை பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் ராஜேஷ் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஷின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.