கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்(42) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் அரசு ஐ.டி.ஐ-யில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மாலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்த கன்றுக்குட்டி மீது மனோஜின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் கன்றுக்குட்டியும் அதே இடத்தில் இறந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனோஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.