கடலூர் மாவட்டத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(20) என்ற மகள் இருந்துள்ளார். 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த அருணா கல்லூரியில் படிக்க விரும்பினார். இது தொடர்பாக தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது மகளை மேல் படிப்பு படிக்க வைக்கவில்லை. பின்னர் அருணா வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு தனது தாயிடம் கேட்டுள்ளார்.

அதற்கும் குணசுந்தரி அனுமதிக்காததால் மன உளைச்சலில் இருந்த அருணா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருணாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.