இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட ப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காளி முக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் மத்திய இணை மந்திரியான வி.முரளிதரன் அவர்கள் இலங்கை சென்றார். இந்த நிலையில் சுதந்திர தின விழா அன்று இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வாழ்ந்து வரும் தமிழ் இன மக்கள் கருப்பு நாளாக அனுசரித்துள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு மற்றும் கடையடைப்பு போன்றவைகளையும் தமிழ் இன மக்கள் செய்தனர். அது மட்டுமல்லாமல் முள்ளத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் பல்வேறு பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.