டைரக்டர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் “செங்களம்”. இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பாக அபினேஷ் இளங்கோவன் தயாரித்து உள்ளார். இந்த இணைய தொடர் தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகி இருக்கிறது. இத்தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.

இந்த நிகழ்வில் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் உட்பட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் டைரக்டர் அமீர் பேசியிருப்பதாவது, “இப்படைப்பில் பணிபுரிந்திருக்கும் பல பேரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாவர். அனைவரும் இணைந்து ஒரு நல்ல படைப்பை தந்துள்ளனர். இந்த டிரைலர் பார்க்கையில் இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாம் என எனக்கு பொறாமை ஏற்பட்டது. ஆகவே எஸ் ஆர் பிரபாகரன் தற்போதே ஜெயித்து விட்டார்” என்று பேசினார்.