மிகுந்த எதிர்பார்ப்பு இடையே தொடங்கியது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர். சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அமலில் ஈடுபட்டனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பழைய வருத்தங்கள்,  புகார்களை விட்டுவிட்டு புதிய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி இருக்கிறது. கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவையில் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது