மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மும்பையில் இருந்து தூத்துக்குடி சிறப்பு ரயில்(01143) வருகிற 7, 14, 21, 28 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும். இதே போல தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்(01144) வருகிற 9, 16, 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இந்நிலையில் மும்பையில் இருந்து மதியம் 1:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இதேபோல தூத்துக்குடியில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 3:40 மணிக்கு மும்பையை வந்தடையும். இந்த ரயில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ரேச்சூர், வாடி, காலபர்கி, சோலாப்பூர், பாண்ட், புனே, லோனவாலா, கல்யாண், தாதர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.