செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த வெளிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் வட மாநிலங்கள் போல தமிழகம் மாறி வருகிறதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.