ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிரச்சாரம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், பிரச்சாரத்துக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவரிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயன்றபோது, பேட்டி அளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால் என்னால் இப்போது பேச முடியாது சாரி.. சாரி என்று மன்னிப்பு கோரினார்.