சில தினங்களுக்கு கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் மத்தியில் பேசிய அண்ணாமலை, உங்களிடம் துப்பாக்கி இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்காரு. சுட்டுத் தள்ளிட்டு வாங்க. மீதி யை தமிழக பாஜக பார்த்துக்கும் என்று கூறியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கை வலுக்கிறது. விசிக தலைவர் திருமாவளவனும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.