கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சாரல் மழை பெய்ததால் திற்பரப்பு அருகில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடுத்தடுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் போக்குவரத்தை சரி செய்ய போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.