ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை வெற்றிவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக சீனிவாசன் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற இரண்டு கார்கள் மற்றும் கட்டை ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் இரண்டு லாரிகளும் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வெற்றிவேல், சீனிவாசன், மற்றொரு லாரி டிரைவர் அன்பழகன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.