சீனாவுக்கும் ஹாங்காங்கிற்க்கும் இடையில் இருக்கும் புக்சியன் துறைமுகத்திற்கு ஒரு பெண் ஹாங்காங் செல்வதற்காக வந்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரது மேல் உள்ளாடைக்குள் ஐந்து பாம்பு குட்டிகளை தனித்தனியாக துணிப்பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் பாம்புகளை மீட்ட சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்ததோடு வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.