பாகிஸ்தான் நாட்டில் உள்ள லார்கானா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒரே நாளில் பிறந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த குடும்பத்தில் உள்ள தந்தை அமீர் அலி தாய் குதிஜா குழந்தைகள் சிந்து, சாசி, சப்னா, அமீர், அம்பர், அமர், அஹ்மர் என ஒன்பது பேரும் ஒரே நாளான ஆகஸ்ட் ஒன்றில் பிறந்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் அமீர் அலி குதிஜா தம்பதியினருக்கு ஆகஸ்ட் 1 அன்று தான் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் சுகப்பிரசவத்தின் மூலமாகவே பிறந்துள்ளது. எந்த குழந்தையும் அறுவை சிகிச்சை மூலமாக அதே நாளில் பிறக்கவில்லை. இதனால் இந்தக் குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.