பாகிஸ்தானை சேர்ந்த சீமா எனும் பெண் பப்ஜி மூலம் ஏற்பட்ட காதலினால் இந்தியாவிற்குள்  சட்டத்திற்கு புறம்பாக நுழைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கணவர் முறையிட்டிருந்த நிலையில் இவர் தான் இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும் உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். தான் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்டதாகவும் தான் இங்கு வாழ விரும்புவதாகவும் கூறிய சீமா பாகிஸ்தானை விட இந்தியாவில் சட்டங்கள் சரியாக இருப்பதாக கூறியுள்ளார்.