கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் உதய சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பாம்பு பிடி வீரர் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தார்.

அப்போது குளிர்சாதன பெட்டியின் பின்புறம் இருந்து பாம்பு படம் எடுத்தது. உடனே பாம்பு பிடி வீரர் லாவகமாக பாம்பை பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பாம்பு படம் எடுத்த ஆடியோ போது அங்கிருந்தவர்கள் சூடம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.