விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு டவுன் பேருந்து அனந்தபுரம் செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு விரல்கள் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்துக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.