உத்திரபிரதேசத்தில் ரோஹித் ஜெய்ஷால்  தனது அஜாக்கிரதையால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  மது போதையில் அந்த இளைஞர் பாம்பை பிடித்து தனது நாக்கில் அதன் தலையை பிடித்து தேய்க்கும் அளவுக்கு சென்றுள்ளார். இதன் ஆபத்தை உணராமல் செயல்பட்டதால், அவரது நாக்கில் பாம்பு கடித்த்து  பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் விரைவாக பரவியது, 

இதனால் சில நிமிடங்களில் மயக்கமடைந்த நபர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.  விஷமுள்ள ஊர்வனவற்றைக் கையாள்வதில் தவறான மோகத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் போக்கை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இது போன்ற செயல்களின் ஆபத்துகள் பற்றிய பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கல்வியின் அவசரத் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.