சமீபத்திய வைரல் வீடியோவில், சந்திரயான் 1 இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை , புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான பெரியாரை புகழ்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த மயிலம் சாமி அண்ணாதுரை, பெரியாரின் ஆழமான வார்த்தைகளை எதிரொலித்து, “சாத்திரத்தை  விட உன் அறிவு பெரிது அதை சிந்தி” என்ற பெரியாரின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.  

மேலும் இந்த வரிகள்  சந்திரயான் திட்டத்தின் அடித்தளமாக இருந்தன என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு, விஞ்ஞானம் குறித்த முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.