திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சிறுமியை கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .