திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளமந்தை பகுதியில் விவசாயியான அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா(17) கடந்த மூன்றாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்த நிவேதாவை கடித்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மயங்கி விழுந்த நிவேதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.