கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.கே மார்க்கெட்டில் விருதுநகரை சேர்ந்த மச்ச ராஜா என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் மனைவியுடன் கோவையில் வசித்து வருகிறார். மச்ச ராஜாவும் மதுரையை சேர்ந்த வழி விட்டான் என்பவரும் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் வழிவிட்டான் அடிக்கடி மச்ச ராஜாவின் வீட்டிற்கு சென்று வந்த போது அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இதனை அறிந்த ராஜா தனது மனைவியை கண்டித்தார். இதனால் கோபத்தில் ராஜாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனையடுத்து ராஜாவின் மனைவி வழிவிட்டானை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ராமநாதபுரத்தில் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக ராஜாவுக்கும் வழிவிட்டானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று ராஜா டி.கே மார்க்கெட் பல கமிஷன் வண்டியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அவருக்கும் வழிவிட்டானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வழிவிட்டான் அரிவாள் மற்றும் கத்தியால் ராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் உயற்கு போராடிக் கொண்டிருந்த ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வழிவிட்டானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.