திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அப்பிநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி செந்தில் சாலையோரம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்திலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது ரமேஷ் என்பவரது வீட்டில் கட்டிட வேலைகளை செய்த செந்தில் பணிகளை முழுவதும் முடிக்காமல் பாதியிலேயே விட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த ரமேஷ் தனது நண்பரான சாரதி, 16 வயது சிறுவன் ஆகியோருடன் இணைந்து செந்திலை இரும்பு கம்பியால் தாங்கி கொலை செய்வது தெரியவந்தது. இதனால் ரமேஷ், சாரதி உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.