தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர்  நடித்த ‘டாக்டர், டான்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றியை குவித்தது. ஆனால் இதனை தொடர்ந்து வந்த ‘பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த வசூலை தராமல்  பெரிய நஷ்டத்தை வினியோகஸ்தர்களுக்கு அளித்தது. இதனால் சிவகார்த்திகேயன் ரூ.3 கோடி தொகையை  நஷ்ட ஈடாக கொடுத்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது மடோனா அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரையிலும்  எடுத்த ‘மாவீரன்’ காட்சிகளை போட்டு பார்த்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு  திருப்தி அளிப்பதாக இல்லை.

எனவே கதையை கொஞ்சம் மாற்றியமைத்து, மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அவர் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அதற்கு டைரக்டர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியுள்ளது.

இதனையடுத்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “மாவீரன் படம் தொடர்பாக ஆதாரமற்ற வதந்திகளும், பொய்யான தகவல்களும் தொடர்ந்து பரவுகின்றன. இத்தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என ‘மாவீரன்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.