திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம்  அறிவிக்கிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்க வசதியாக திருமலையில் 7000 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. தற்போது கௌஸ்தபம், நந்தகம், பாஞ்ச ஜன்யம், வகுல மாதா தங்கும் அறைகள் வாடகை 600 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நாராயணகிரி தங்கும் விடுதிகளில் 150 ரூபாயிலிருந்து 750 ரூபாய் ஆகவும் கார்னர் சூட் வாடகை 2200 ரூபாய் மற்றும் ஸ்பெஷல் டைப் காட்டேஜ் வகைகள் 750 ரூபாயிலிருந்து 200800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.