செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா,  நீங்க சிட்டியில் இருந்து வந்து நீங்க எல்லாம் கேக்குறீங்க.  அடுத்த மாதம் நல்ல மழை வரப்போகுது. நீங்க சென்னை சிட்டி எப்படி இருக்குன்னு பாக்க தான் போறீங்க ?  ஆனால் ஒரு மேயர்…  அந்த பொண்ணு என்ன சொல்லுது ? 4000 கோடி ஏற்கனவே செலவு பண்ணிட்டோம். நாங்க எல்லா வேலையும் முடிச்சிட்டோம் அப்படின்னு சொல்றாங்க. நீங்க முடிச்சிருந்தீங்கன்னா…  ஏங்க தண்ணி இப்படி இருக்கு ?

ஒரு நாள் மழைக்கே சிட்டி தாங்கலையே….  என்ன நினைச்சுட்டு சொல்றீங்க நீங்க, அது தவறு இல்லையா ? அது மட்டும் இல்ல,  இங்க வந்து ட்ரெயின் ஏஜ்ல ஒர்க் பண்றவங்க… கிட்டத்தட்ட மூணு, நாலு மாசம் அவங்க யாரும் வேலைக்கு வர்றதில்ல. இப்ப அதனால குப்பைகள் எல்லாம் அந்த தண்ணியோட போயி கீழே அடச்சிருக்கு.

அதை எடுப்பதற்கு இப்ப என்ன தெரியுமா செஞ்சிட்டு இருக்காங்க ? இரவு ஏழு மணிக்கு மேல…. சிட்டில எல்லா இடத்திலயுமே பாருங்க, நீங்க… கழிவு நீர் லாரி வருது. அதவச்சி ஒரு இடத்தில பிளக், பண்ணி என்ஜின் வைத்து எடுக்குறாங்க.  எடுத்துட்டு போய் கூவத்துல போய் ஊத்திடுறாங்க, இது மாதிரி செய்ய முடியுமா?  திமுக ஆட்சி எப்படி இருக்குன்னா யானைக்கு டீஸ்பூனில் சாப்பாடு கொடுக்குற மாதிரி இருக்க. சிட்டில வாட்டரை கூட அவுங்களால சரியா செய்ய முடியல என தெரிவித்தார்.