கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமங்கலி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கச்சராபாளையம் சாலையில் சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.