ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது எரிவாயு செல்லும் குழாய் சேதமடைந்து அதிக சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது.

இதனை பார்த்ததும் பொதுமக்களும் சாலை பணியாளர்களும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அறிந்த தனியார் எரிவாயு நிறுவன அதிகாரிகளும் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழாய் உடைப்பை சரி செய்தனர். இது குறித்து புகாரின் பெயரில் கவனக் குறைவாக செயல்பட்ட பொக்லைன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.