புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வருகிற 20-ஆம் தேதி மாலை 5:20 மணிக்கு இந்த கோவிலில் சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் சிறப்பு அனுமதி வாங்கி அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple என்ற ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு அபிஷேகத்திற்கு 500 ரூபாயும், சிறப்பு சகஸ்ர நாம அர்ச்சனைக்கு 300 ரூபாயும், சிறப்பு தில சூரண நெய்வேத்திய அர்ச்சனைக்கு 300 ரூபாயில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.