கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலாக்குடி வட்டவிளை காமராஜர் தெருவில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தினமும் செல்போனில் பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டியூஷன் சென்ற சிறுமியை மடக்கி காரில் வைத்து சுந்தர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து சுந்தர் தொந்தரவு அளித்ததால் பாதிக்கப்பட்ட மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தரை செய்தனர்.