கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காணிக்காரன் கொட்டை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மூர்த்தி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தியை திடீரென வழிமறித்த மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த அஜித், ஸ்டாலின், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.